Dr ஷாபி: சுகாதார அமைச்சின் விசாரணை குழுவை நிராகரிக்கும் ஊழியர்கள் - sonakar.com

Post Top Ad

Wednesday 29 May 2019

Dr ஷாபி: சுகாதார அமைச்சின் விசாரணை குழுவை நிராகரிக்கும் ஊழியர்கள்



மருத்துவர் ஷாபி தொடர்பிலான சர்ச்சைகளை விசாரிக்க சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளனர் குருநாகல போதனா வைத்தியசாலை ஊழியர்கள்.



எனினும் ஜனாதிபதி விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகவும் ராஜித சேனாரத்னவின் விசாரணைக்குழு வைத்தியசாலை பணிப்பாளரை பதவி நீக்கம் செய்வதற்கு முயற்சிப்பதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் குறித்த விவகாரத்தின் பின்னணியில் அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment