இலங்கை தீவிரவாதிகள் வருகையாம்: கேரளாவில் பாதுகாப்பு அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 25 May 2019

இலங்கை தீவிரவாதிகள் வருகையாம்: கேரளாவில் பாதுகாப்பு அதிகரிப்பு


இலங்கையிலிருந்து ஐ.எஸ். உறுப்பினர்கள் 15 பேர் படகொன்றில் கேரளா நோக்கிப் பயணித்திருப்பதாக கிடைத்த தகவலின் பின்னணியில் அங்கு கரையோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



திரிசூர், கோழிக்கூடு பகுதிகள் மற்றும் கடல் எல்லைப் பிராந்தியங்களில் இப்பின்னணியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

முன்னதாக கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஐ.எஸ். உறுப்பினர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment