'புர்கா' தடை நிரந்தர சட்டமாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் - sonakar.com

Post Top Ad

Sunday 5 May 2019

'புர்கா' தடை நிரந்தர சட்டமாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர்



அவசர கால சட்டம் முடிவுக்கு வந்த பின்னரும் புர்கா தடை தொடர வேண்டும் என்பதே தனது அபிப்பிராயம் என தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான.



தற்கொலைதாரிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருப்பதன் பின்னணியில், நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்தே தான் இவ்வாறு கருதுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். அந்த வகையில் முகம் மூடும் வகையிலான ஆடைகளுக்கான தடை நிரந்தர சட்டமாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து அவசரகால சட்டத்தின் கீழ், முகம் மூடும் வகையிலான ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

Naeem Farook said...

Mr parana Is that suicide Bombers are came with Burka ?

Sri Lanka Guardian said...

Its my part of dress. I can't show my face to others in public.

Post a Comment