அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை: ரணில் - sonakar.com

Post Top Ad

Tuesday 7 May 2019

அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை: ரணில்



சர்வதேச தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதாகவும் அரசு இது தொடர்பில் அவதானமாக இருக்கும் எனவும் தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்த போதிலும் தற்போது இலங்கை சர்வதேச பயங்கரவாதத்திற்கு இலக்காகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவிக்கிறார்.

தற்சமயம் நாடு வழமைக்குத் திரும்பி வருகின்ற போதிலும் தொடர்ந்தும் அவதானத்துடனான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment