வவுனியா: ரிசாத் பதியுதீனை பதவி நீக்கக் கோரி சுவரொட்டிகள் - sonakar.com

Post Top Ad

Thursday 30 May 2019

வவுனியா: ரிசாத் பதியுதீனை பதவி நீக்கக் கோரி சுவரொட்டிகள்



அமைச்சர் ரிசாத் பதியுதீனை நாடாளுமன்றிலிருந்து நீக்கிவிடக் கோரி வவுனியாவில் பல இடங்களில் சுவரொட்டிகள் காணப்படுகிறது.



சிங்கள - தமிழ் அமைப்புகள் சிலவற்றின் பெயரில் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள அதேவேளை நாடாளுமன்றில் ரிசாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் முடிவொன்றை எட்டவில்லையென தெரிவிக்கிறது.

வன்னி தமிழ் மக்கள், இளைஞர் அமைப்பு மற்றும் சிங்ஹலே அபி எனும் அமைப்புகளின் பெயர்களில் இவ்வாறு சுவரொட்டிகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment