பொரளை OIC மரணம்: வாகன சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Monday 11 March 2019

பொரளை OIC மரணம்: வாகன சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு


மஹிந்தானந்த அளுத்கமகேயின் புதல்வர், தொழிலதிபர் தம்மிகவின் புதல்வர் உட்பட முக்கிய பிரமுகர்களின் வாரிசுகள் பயணித்த வாகனம் மோதியதில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுப் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ள நிலையில் குறித்த விவகாரத்தில் கைதான வாகன சாரதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


சம்பம் இடம்பெற்ற மறு தினமே ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் இன்று எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment