போதைப் பொருளுடன் இரு நைஜீரியர்கள் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday 3 March 2019

போதைப் பொருளுடன் இரு நைஜீரியர்கள் கைது!


போதைப் பொருள் கைவசம் வைத்திருந்த நிலையில் இரு நைஜீரிய பிரஜைகளும் உள்நாட்டவர் ஒருவரும் நேற்றைய தினம் கல்கிஸ்ஸ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



26 வயதுடைய நைஜீரிய பிரஜைகளுடன் மொரட்டுவயைச் சேர்ந்த 40 வயது இலங்கையர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கைதானவர்களிடமிருந்து 32.19 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment