மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு ரூ. 5000மாக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Tuesday 5 March 2019

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு ரூ. 5000மாக உயர்வு!


மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவை இரண்டாயிரம் ரூபாவால் அதிகரிப்பதாக அறிவித்துள்ளார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.


இதனடிப்படையில் இதுவரை வழங்கப்பட்டு வந்த 3000 ரூபாவாக வழங்கப்பட்டு வந்த குறித்த கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிப்பதாகவும் இதற்கென 4320 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாகவும் நிதியமைச்சர் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, பொது இடங்களில் புதிய கழிவறைகளை நிர்மாணிப்பதற்கென 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment