அனைத்து MPக்களையும் தம்மோடு இணைய அழைப்பு விடுக்கும் ரணில்! - sonakar.com

Post Top Ad

Sunday 3 February 2019

அனைத்து MPக்களையும் தம்மோடு இணைய அழைப்பு விடுக்கும் ரணில்!


ஐக்கிய தேசிய முன்னணியில் இதுவரை இணையாத அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தம்மோடு கை கோர்க்கும்படி அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.



தேசிய அரசமைக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு திறந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஏலவே கட்சிக்குள் நிலவும் பதவிப் போட்டியை சமாளிக்கவே தேசிய அரசு மூலம் மேலும் 36 பேருக்கு பதவிகளை உருவாக்கும் முயற்சிள் இடம்பெறுவதாக எதிரணியினர் தெரிவித்து வரும் நிலையில் ரணில் அனைத்து க்களையும் தம்மோடு இணைந்து கொள்ள கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment