ரஞ்சனின் 'கொகைன்' குற்றச்சாட்டு: கிரியல்ல தலைமையில் விசாரணைக் குழு - sonakar.com

Post Top Ad

Wednesday 20 February 2019

ரஞ்சனின் 'கொகைன்' குற்றச்சாட்டு: கிரியல்ல தலைமையில் விசாரணைக் குழு


அமைச்சரவையில் உள்ளவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதைப்பொருள் உட்கொள்வதாக ரஞ்சன் ராமநாயக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரிக்க லக்ஷ்மன் கிரியல்ல தலைமையில் விசாரணைக்குழுவொன்றை நியமித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.



24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலைத் தாம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக ரஞ்சன் தெரிவித்திருந்த அதேவேளை அதனை எழுத்து மூலம் தரும்படி சபாநாயகர் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், இது பற்றி ஆராய ஐக்கிய தேசியக் கட்சி விசாரணைக்குழு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment