வர்த்தகரிடம் 5 லட்சம் பறிக்க முனைந்த இராணுவ சிப்பாய் கைது! - sonakar.com

Post Top Ad

Monday 25 February 2019

வர்த்தகரிடம் 5 லட்சம் பறிக்க முனைந்த இராணுவ சிப்பாய் கைது!


மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரிடம் 5 லட்ச ரூபா பணம் பறிக்க முனைந்த இராணுவ சிப்பாய் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



குறித்த நபரிடமிருந்து 10,000 ரூபா பணம், 12 இராணுவ சீரூடைகள், கைக்குண்டொன்று மற்றும் ரக துப்பாக்கி தோட்டாக்கள் 47ம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் குடா ஓய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment