பாணந்துறையில் பொலிசார் - பொதுமக்கள் முறுகல்! - sonakar.com

Post Top Ad

Friday 4 January 2019

பாணந்துறையில் பொலிசார் - பொதுமக்கள் முறுகல்!


பாணந்துறை, தொட்டவத்தை பகுதியில் ஜும்மா தொழுகை நேரத்தில் பிரதேசத்தின் முஸ்லிம்கள் - பொலிசாரிடையே முறுகல் நிலை தோன்றியிருந்தது.



தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் 'பள்ளிவாசலுக்கு' சென்ற ஒருவரை பொலிசார் தடுத்ததன் பின்னணியில் உருவான வாய்த்தர்க்கம் முறுகலாக மாறியிருந்ததோடு பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதாக சோனகர்.கொம் செய்தியாளர் தெரிவித்தார்.

இச்சூழ்நிலையில் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ள அதேவேளை பிரதேச முக்கியஸ்தர்கள் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-AM

No comments:

Post a Comment