வருட இறுதிக்குள் பெரமுனவிலிருந்து 'ஜனாதிபதி': பசில்! - sonakar.com

Post Top Ad

Sunday 13 January 2019

வருட இறுதிக்குள் பெரமுனவிலிருந்து 'ஜனாதிபதி': பசில்!


இவ்வருடம் முடிவதற்குள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதியொருவர் நாட்டைப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.


கடந்த ஒக்டோபரில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கத் தமது தரப்பு தயாராக இருக்கவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், இவ்வருட முடிவுக்குள் பெரமுன ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படுவது திண்ணம் என தெரிவிக்கிறார்.

டிசம்பருக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை மாகாண சபைத் தேர்தல்களும் பெரும்பாலும் வருட இறுதி வரை இழுபறிக்குள்ளாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment