இனி நாட்டை முன்னேற்ற வேண்டும்: அர்ஜுன - sonakar.com

Post Top Ad

Sunday 23 December 2018

இனி நாட்டை முன்னேற்ற வேண்டும்: அர்ஜுன


நாட்டில் நிலவிய அரசியல் சர்ச்சைகள் முடிவுக்கு வந்து நாடு ஸ்திரமடைந்துள்ளதாக தெரிவிக்கின்ற அர்ஜுன ரணதுங்க, இனி நாட்டை முன்னேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கிறார்.



தற்போதைய சூழ்நிலையில் அமைச்சுக்கள் இரவு-பகலாக உழைக்கும் தேவையிருப்பதாகவும் பொது சேவை ஊழியர்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது அமைச்சு 24 மணி நேரமும் இயங்கும் என ஏலவே சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment