மைத்ரியுடனான சந்திப்பு: JO வின் சந்தேகத்துக்கு மஹிந்த விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 10 October 2018

மைத்ரியுடனான சந்திப்பு: JO வின் சந்தேகத்துக்கு மஹிந்த விளக்கம்!



எஸ்.பி. திசாநாயக்கவின் வீட்டில் மைத்ரி - மஹிந்த இடையே இடம்பெற்ற சந்திப்பு தொடர்பிலான தகவல் கசிந்த நிலையில் இருவரும் இடைக்கால அரசு பற்றிப் பேசிக்கொண்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.



எனினும், தனக்கெதிரான வழக்குகளை கைவிடும்படி மைத்ரியிடம் வேண்டுகோள் விடுக்கவே மஹிந்த சந்திக்கச் சென்றதாக கூட்டு எதிர்க்கட்சியினர் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் தமது சகாக்களை அழைத்து இது குறித்து விளக்கமளித்துள்ளார் மஹிந்த.

தனது சந்திப்பில் அவ்வாறு எதுவும் பேசவில்லையெனவும் அது இயல்பான கலந்துரையாடல் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment