நாமல் - நாலக குரல் மாதிரிகளை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானம் - sonakar.com

Post Top Ad

Monday 15 October 2018

நாமல் - நாலக குரல் மாதிரிகளை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானம்


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய கொலைத் திட்டம் தொடர்பில் உளவாளி நாமல் குமார மற்றும் டி.ஐ.ஜி நாலக டி சில்வா ஆகியோரிடம் பெறப்பட்ட குரல் மாதிரிகளை வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு ஆராயவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த வாரம் வெளியிட்டிருந்தனர்.


இந்நிலையில், தற்போது குரல் மாதிரிகளை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி ஆராயவுள்ளதாக இன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மந்தகதியில் இடம்பெறுவதாக மைத்ரி கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment