மஹிந்த தோற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Wednesday 31 October 2018

மஹிந்த தோற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்: விஜேதாச


19ம் சட்டத் திருத்த மொழிபெயர்ப்பு தவறினால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்குத் தன்னை நீக்கும் அதிகாரமில்லையென எண்ணிக்கொண்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.



ஜனாதிபதிக்கு இதற்கான சம்பிரதாயபூர்வ அதிகாரம் இருப்பதாக விஜேதாச மேலும் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுத்தால் ஐக்கிய தேசியக் கட்சியால் 40 ஆசனங்களைக் கூடப் பெற முடியாது எனவும் விஜேதாச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment