ஜலஜீவி உதான: நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு - sonakar.com

Post Top Ad

Thursday 11 October 2018

ஜலஜீவி உதான: நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு

"ஜலஜீவி உதான – 2018” நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு நேற்றைய தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது. 
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா, இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி, பிரதியமைச்சர் அமீரலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து 10,000 இற்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- கஹட்டோவிட்ட ரிஹ்மி

No comments:

Post a Comment