நான் எந்தத் தவறும் செய்யவில்லை: ஜயசூரிய மறுதலிப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday 16 October 2018

நான் எந்தத் தவறும் செய்யவில்லை: ஜயசூரிய மறுதலிப்பு!


சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் ஊழல் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவில்லையெனவும், உண்மைகளை மறைத்ததாகவும் முன்னாள் இலங்கை கிரிக்கட் நட்சத்திரம் சனத் ஜயசூரிய மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.



தன்னைப் பொறுத்தவரையில் நேர்மையாக விசாரணைக்கு முகங்கொடுத்ததாகவும் தேவையான ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் தெரிவிக்கின்ற அதேவேளை, விசாரணையின் போது அவரது கைத்தொலைபேசியை யிடம் ஒப்படைக்கத் தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காகவே அதனை ஒப்படைக்க மறுத்ததாக ஜயசூரிய விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment