பாலமுனை இப்னு ஸீனாவில் 08 மாணவர்கள் புலமைப்பரிசிலுக்குத் தகுதி - sonakar.com

Post Top Ad

Friday 5 October 2018

பாலமுனை இப்னு ஸீனாவில் 08 மாணவர்கள் புலமைப்பரிசிலுக்குத் தகுதி


இம்முறை 2018 வெளியான புலமை பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று வலயத்தில் கீழ் உள்ள பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலயம் வரலாற்று சாதனை பெற்றுள்ளதாக அதிபர் சாஹிர் ஹூசைன் தெரிவித்துள்ளார். 


இம்முறை 163 மேல் வெட்டுப்புள்ளிகளை பெற்றுக்கொண்டு 08 மாணவச் செல்வங்கள் புலமைப் பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்காக உழைத்த  ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அ=அனைவருக்கும் நன்றி தெவித்ததுடன். இப்பாடசாலையின் வளச்சிக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இன்னும் சாதனைகளை நிலைநாட்டலாம் எனவும் தெரிவித்தார். 

05 தரத்திற்குட்பட்ட இப் பாடசாலை அன்மைக்காலமாக பல சாதனைகளை நிலைநாட்டி வருவதுடன் இம்முறை 08 மாணவர்களை வெற்றிபெற்றது சாதனைக்குறியதாகும். 

இப்பரீட்சையில் தோற்ற அதிகமான மாணவர்கள் சித்தி புள்ளிகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

-சப்னி அஹமட்

No comments:

Post a Comment