கொலைத் திட்டம் பற்றி CID விசாரிக்கும்: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Friday 14 September 2018

கொலைத் திட்டம் பற்றி CID விசாரிக்கும்: மைத்ரி!


தன்னையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பிலான விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.


போதைப்பொருளுக்கு எதிரானவர்கள் என்பதாலேயே தம்மைக் கொலை செய்வது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக மைத்ரி மேலும் விளக்கமளித்துள்ளார்.

தூசன விரோதி பலகாய எனும் புதிய அமைப்பு மேற்கொண்டுள்ள முறைப்பாட்டின் பின்னணியில் குறித்த ஒலிப்பதிவைத் தானும் செவியுற்றதாகவும் சி.ஐ.டி விசாரணையின் பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைத்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment