அலோசியஸ் - பாலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 13 September 2018

அலோசியஸ் - பாலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு


மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் கைதான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பாலிசேனவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.


பர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அலோசியசும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகார பாலிசேனவும் இதில் தொடர்பு பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மத்திய  வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரிலேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இருவரது விளக்கமறியலும் எதிர்வரும் 27ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment