திகன வன்முறையின் பின்னணியில் அரசும் - நாலகவும்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday 18 September 2018

திகன வன்முறையின் பின்னணியில் அரசும் - நாலகவும்: கம்மன்பில


கண்டி, திகன பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவன்முறையின் பின்னணியில் அரசாங்கமே இருப்பதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.



பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான டி.ஐ.ஜி. நாலக டி சில்வா இதனைத் திசை திருப்ப உதவியதனாலேயே அவருக்கு அரசின் ஆசீர்வாதம் இருப்பதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

திகனயில் இடம்பெற்றது இனமுறுகலன்றி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையெனவும் 1983 போன்று 2018லும் ஐக்கிய தேசியக் கட்சியே இன வன்முறையை உருவாக்கியது எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment