ஞானசாரவுக்கு மேலும் சில நாட்கள் தங்கியிருக்க உத்தரவு! - sonakar.com

Post Top Ad

Sunday 9 September 2018

ஞானசாரவுக்கு மேலும் சில நாட்கள் தங்கியிருக்க உத்தரவு!


ஸ்ரீஜயவர்தனபுரயில்  மீண்டும் சிகிச்சைக்காக அனுமதி பெற்றிருந்த ஞானசாரவை மேலும் சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருக்குமாறு வைத்தியர்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



நாளைய தினம் ஞானசாரவுக்கு ஆதரவாகள முன்னாள் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது மேலதிக பரிசோதனைகள் நிமித்தம் ஞானசார வைத்தியசாலையில் தங்கியிருக்க அறிவிறுறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஆறாம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஞானசார ஸ்ரீஜயவர்தனபுரவுக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment