மஹிந்த மட்டுமே தலைவன்: கோத்தா முன்னிலையில் வெல்கம சூளுரை! - sonakar.com

Post Top Ad

Thursday 20 September 2018

மஹிந்த மட்டுமே தலைவன்: கோத்தா முன்னிலையில் வெல்கம சூளுரை!


மஹிந்த ராஜபக்சவை மாத்திரமே தனது தலைவனாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வேறு யாரின் கீழும் பணியாற்றத் தான் தயாரில்லையென கோத்தபாய முன்னிலையில் சூளுரைத்துள்ளார் குமார வெல்கம.



தன்னைத் தீவிர மஹிந்த பக்தனாக சித்தரித்து வரும் குமார வெல்கம, பாணந்துறையில் மஹிந்த மற்றும் கோத்தபாய கலந்து கொண்ட நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டை ஆளும் நபர் மஹிந்தவாகவே இருக்க வேண்டும் என வெல்கம மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment