ஜனபலய ஏன் தாக்குப்பிடிக்கவில்லை: வாசுதேவ விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Friday 7 September 2018

ஜனபலய ஏன் தாக்குப்பிடிக்கவில்லை: வாசுதேவ விளக்கம்!


கொழும்பை நோக்கிய ஜனபலயவில் கலந்து கொண்டவர்கள் மறு நாள் காலை வரை கொழும்பில் தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மக்கள் கலைந்து சென்றதால் ஆர்ப்பாட்டம் தாக்குப்பிடிக்கவில்லையென ஒப்புக்கொண்டுள்ளார் வாசுதேவ நானாயக்கார.



ஆட்சியைக் கைப்பற்றும் சந்தர்ப்பமாக மஹிந்த தரப்பினால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உணர்வுபூர்வமாக பங்களிக்கவில்லையெனவும் பணம் கொடுத்து அழைத்துவரப்பட்டதாகவும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இரவு 9 மணி அளவில் 2500 பேரே எஞ்சியிருந்ததாகவும் மக்கள் கலைந்து சென்றதனாலேயே ஜனபலய தாக்குப்பிடிக்கவில்லையெனவும் வாசுதேவ மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment