ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன்: மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Saturday 1 September 2018

ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன்: மஹிந்த!


கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பின் ஓய்வு பெறப் போவதாகக் கூறிச் சென்ற போதிலும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் தீவிர அரசியலில் குதித்துள்ள மஹிந்த, தான் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதும் சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் போவதாக தெரிவிக்கிறார்.



தற்போது திடமான தலைமைத்துவம் இல்லாது நாட்டின் பொருளதாரமும் சீர்குலைந்து போயுள்ளதாக தெரிவிக்கின்ற அவர், தான் அதனை சரிசெய்ய உறுதி பூண்டுள்ளதாக நேற்றைய தினம் கைத்தொழில் கண்காட்சியொன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் கடன்களையே தாம் அடைத்துக் கொண்டிருப்பதாக ரணில் - மைத்ரி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment