முறுகல் எதிரொலி: பொன்சேகாவுக்கு STF பாதுகாப்பு இல்லை - sonakar.com

Post Top Ad

Wednesday 29 August 2018

முறுகல் எதிரொலி: பொன்சேகாவுக்கு STF பாதுகாப்பு இல்லை


விசேட அதிரடிப்படையினர் தமது ஆதரவாளர்களைக் குறிவைத்து எதோச்சாதிகாரமாக நடந்து கொள்வதாக கடந்த வாரம் சரத் பொன்சேகா காரசாரமாக கருத்து வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



எனினும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விசாரணை நடாத்துவதாக சட்ட,ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கிறார்.

வெள்ளியன்றும், திங்கட்கிழமையும் பொன்சேகாவுக்கான விசேட அதிரடிப்படையினர் சமூகமளிக்காத நிலையில் சபாநாயகரிடம் முறையிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

No comments:

Post a Comment