கொழும்பில் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் நினைவுக் கூட்டம் - sonakar.com

Post Top Ad

Thursday 30 August 2018

கொழும்பில் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் நினைவுக் கூட்டம்

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் முதலாவது நினைவு தினக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு -10, ஸ்ரீசங்கராஜமாவத்தையில் உள்ள அல்-ஹிதாயா மஹா வித்தியாலய பஹார்தீன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பீ.எம். பாரூக் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்பிரதம அதிதியாக அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்வார்.


விசேட பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கலந்து கொள்வதுடன் அஸ்வர் நினைவுப் பேருரையை பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் நிகழ்த்துவார்.
-எம்.எஸ்.எம்.ஸாகிர்

No comments:

Post a Comment