நாங்களும் சரியான நேரத்தில் அறிவிப்போம்: மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Saturday 5 May 2018

நாங்களும் சரியான நேரத்தில் அறிவிப்போம்: மஹிந்த!


மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் சரியான நேரத்தில் சொல்லப்போவதாக அண்மையில் மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருநத நிலையில், கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் எனும் அறிவிப்பு சரியான நேரத்தில் வரும் என மஹிந்த ராஜபக்சவும் தெரிவித்துள்ளார்.



கோத்தபாய ராஜபக்சவே கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவார் எனும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்ற அதேவேளை மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக உள்ளார்.

இந்நிலையிலேயே, இதற்கான அறிவிப்பு சரியான நேரத்தில் வரும் என இரு தரப்பும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment