நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் தொகை ஒன்பதாக உயர்ந்துள்ள அதேவேளை, 38,000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஆகக்குறைந்தது நால்வர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள அதேவேளை மேலும் சில தினங்களுக்கு அதிக மழை வீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment