தோல்விக்கு நாங்களே தான் காரணம்: S.M சந்ரசேகர - sonakar.com

Post Top Ad

Sunday 8 April 2018

தோல்விக்கு நாங்களே தான் காரணம்: S.M சந்ரசேகர


கூட்டு எதிர்க்கட்சியினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றமைக்கு கூட்டு எதிர்க்கட்சியே காரணம் என விளக்கமளித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் கூ.எ முக்கியஸ்தருமான எஸ்.எம். சந்ரசேகர.



ஒரு சில கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளே குழப்பத்தை உருவாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலசுகட்சியும் இறுதித் தருவாயில் இரு அணிகளாக நின்று ஆதரித்தும் வாக்களிப்பைத் தவிர்த்தும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment