ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும்: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Saturday 21 April 2018

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும்: விஜேதாச



ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் விஜேதாச ராஜபக்ச.


மஹிந்த அரசில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குட்பட்டோருக்கு எதிரான விசாரணைகள் விஜேதாசவின் தலையீட்டினாலேயே தாமதப்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் விஜேதாச பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அண்மையில் மஹிந்த தரப்பும் இவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment