பிரியவில்லை இரு பக்கமும் கால் வைத்திருக்கிறோம்: நிமல்! - sonakar.com

Post Top Ad

Friday 27 April 2018

பிரியவில்லை இரு பக்கமும் கால் வைத்திருக்கிறோம்: நிமல்!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இரு அணிகள் இருப்பதொன்றும் இரகசியம் கிடையாது என தெரிவித்துள்ள நிமல் சிறிபால டிசில்வா, ஊடகங்கள் விரும்புவது போன்று கட்சியில் உள்ளவர்கள் பிரியவில்லையெனவும் இரு பக்கமும் கால் வைத்து நிலையாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.



இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், குரூப் 16 உறுப்பினர்களும் ஸ்ரீலசுகட்சி மே தின நிகழ்விலேயே பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்ததுடன் மகாநாயக்கர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே மே தின நிகழ்வு பின் போடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கம் மே 1ம் திகதி தாம் ஊர்வலம் நடாத்தப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment