இலங்கையர் எனும் அடையாளமும் சமகாலச் சவால்களும் - sonakar.com

Post Top Ad

Saturday 24 March 2018

இலங்கையர் எனும் அடையாளமும் சமகாலச் சவால்களும்


இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலம் நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அம்முயற்சிகள் சவாலுக்குட்படுத்தப்படுவதை காண முடிகிறது.

மாறாத மாற்றத்துடன் கட்சி அரசியலும், இன, மத சித்தாந்தங்களும் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு அவை முக்கியத்துவம் பெறுவதனால் நல்லிணக்கம் என்பது எட்டாக்கணியாகவுள்ளது. பெரும்பான்மை என்ற மேலாதிக்க சிந்தனை இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை உருவாக்குவதோடு, அடக்குமுறைக்கும் வழிவகுப்பது மாத்திரமின்றி, பழிதீர்க்கும் படலத்தையும் அரசங்கேற்றி வருகிறது. இந்நாட்டை நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மேற்குல ஏகாதிபத்திவாதிகள் விதைத்து விட்டுச் சென்ற இனவாதமும், மதவாதமும்  சந்ததி வழியாகக் கடந்தப்பட்டு நாட்டை அழிவின்பால் நகர்த்துவதற்கு காரணமாயிற்று.

அந்நிய ஏகாதிபத்தியவாதிகள் விதைத்துவிட்டுச் சென்ற இனவாத, மதவாதச்; சிந்தனைகொண்டோரினால் உருவான அமைப்புக்களினதும், அரசியல் கட்சிகளினதும்; செயற்பாடுகள் நல்லிணக்க முயற்சிகளுக்கு தொடராக தடையாக அமைவதுடன் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் நிம்மதிக்கு குந்தகம் விளைவித்து வருவதையும் வரலாற்று நெடுங்கிலும் அவதானிக்க முடிகிறது. ஒரு ஜனநாயக தேசத்தில் வாழும் பல்லின சமூகத்திலுள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் அச்சமூகம் சார்ந்த அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் ஏனைய சமூகங்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் அனுபவிப்பதற்கு இந்நாட்டின் அரசிலமைப்பில் இடமளி;க்கபட்டுள்ள போதிலும், இந்நாட்டின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் அனுபவிக்கின்ற அரசியல் உரிமைகளையும், மத உரிமைகளையும் பாதிக்கும் வகையில் இனவாதிகளும், மதவாதிகளும் பொய்யான குற்றச்சாட்டுக்களை பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் முன்வைத்து வருவதன் மூலம் நல்லிணக்கம் இந்நாட்டில் ஏற்படுத்தப்படுவது என்பது சமகாலச் சவால்களுக்கு உட்பட்டதாகவே காணப்படுகிறது அதுமாத்தரிமின்றி, இத்தகையவர்களின் செயற்பாடுகள் நாட்டின்; அமைதிக்கும். வளர்ச்சிக்கும், பங்கம் ஏற்படுத்திவருவதோடு, சர்வதேசம் இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகிக்கும்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழி வகுக்கிறது.


மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர் ஜவர்தனாவினால்; 1943ஆம் இலங்கை அரசாங்க சபையில் தனிச்சிங்களம் அரச கரும மொழியாக ஆக்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டபோது, அதை எதிர்த்து வாதித்திட்ட மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு,ஆர்.டி பண்டாரநாயக்க பின்னர் தனது சுய அரசியலுக்காகவும,; பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் 1956ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார். அந்நாளிலிருந்து பௌத்த சிங்கள இனவாதச் சிந்தனையாளர்களின் சிறுபான்மை இனங்களுக்கெதிரான செயற்பாடுகள் பல்வேறு தளங்களிலிருந்தும் முன்னெடுக்கப்படத்; தொடங்கியது.

வரலாற்றுத் தவறு

பௌத்த சிந்தனைவாத்தினால் ஏற்பட்ட வரலாற்றுத் தவறின்  எதிரொலியானது வளமான இலங்கையை சுடுகாடாக மாற்றியது. அரசியல், சமூக, பொருளாதாரத்தில் இந்நாட்டை நலிவடையச் செய்ததுடன் பல்லாயிரக்காண அப்பாவிகளின் உயிர்களை காவுகொண்டும,;; இந்நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய பெருமதிமிக்க மனிதவளத்தை ஊனமாக்கியும், கடல் கடந்து வாழவும்; செய்திருக்கிறது. 

குறிப்பாக வடக்கு, கிழக்கு  தமிழ் பேசும் மக்களின் சமூக, பொரளாதார, அரசியல், கல்வி. கலாசாரக் கட்டமைப்புக்கள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டன. 30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வலிகளுக்கு இன்னும் முறையான நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில், அவ்வலிகளின் குரல்கள் தேசியத்திலும் சர்வதேசத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், முஸ்லிம்களை நோக்கி இனவாதம் அதன் சுடரை விரியவிட்டிருப்பதை அண்மைய வன்முறைகள்; பறைசாட்டுகின்றன. அளுத்தகம முதல் அம்பாறை வரையும், காலி கிந்தோட்டை முதல் கண்டி கட்டுகஸ்தோட்டை வரையும் இனவாதத்தின் தீப்பொறி அப்பாவி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்தொழித்திருப்பது மாத்திரமின்றி, இந்நாடு முஸ்லிம்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்றது நாடு என்பதையும் சர்வதேசத்திடம் அடையாளப்படுத்தியிருக்கிறது.

பௌத்த மத எழுச்சிக்காகப் செயற்படுகின்றோம் என்று கூறிக்கொள்ளும் பலசேனாக்களும், பலகாயக்களும் பௌத்த தர்மங்களைப் பற்றிப் பேசாமல் சிறுபான்மைச் சமூகங்களின் மத, கலாசார விடயங்களுக்கு மாசு கற்பித்துக் கொண்டும், போலிக்குற்றச்சாட்டுக்களையும், வெறுப்புப் பேச்சுக்களையும் நல்லெண்ணம் கொண்ட பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் முன்வைத்தும் வருவது மாத்திரமின்றி, கடந்த பல வருடங்களாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்  கொச்சைப்படுத்திக்கொண்மிருக்கிறார்கள், 

அகிம்சையை வலியுறுத்தும்;; பௌத்த தர்மத்தை ஏற்றுள்ள அரசியல்வாதிகளும், கடும்போக்காளர்களும், ஏனைய இனத்;தினரது மனங்களைப் புன்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிடுவதும்;, அநீதியான நடவடிக்கைகளையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்து விடுவதும் என்ற செயற்பாடுகள் எவ்வாறு பௌத்த மதத்தின்; எழுச்சிக்கு அவர்களால் புரியப்படும் உபகாரமா அமையும் என்ற கேள்வியும்; எழுப்பப்படுகிறது. சுதந்திரத் தேசமொன்றில் வாழும் ஒரு இனத்தையும் இவ்வினத்தினர் பின்பற்றும் மதத்தினையும் நிந்தனை செய்வதுதான் பௌத்த மதத்தைக் காப்பாற்றும் செயல் என்றால் நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நன்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்தியானம் என்ற பௌத்த மதம் போதிக்கும் எட்டு நெறிமுறைகளை இத்தகைய இனவாத சிந்தனைகொண்டோர் கடைபிடிக்கத் தேவையில்லையா?

பௌத்த மதம் பெரும்பாலும், நற்செய்கைகளைச் செய்தல,; கெட்ட செயல்களை விலக்குதல், பொறாமை கொள்ளாதிருத்தல், சிறு உயிரைக் கூட துன்புறுத்தாதிருத்தல்;, மற்றவர்களுக்கு தீங்கிழைக்காதிருத்தல் போன்ற உயர்ந்த தத்துவங்களைக் கொண்டிருக்கிறது. இவ்வாறான பௌத்த மதத்தின் உயர்ந்த தத்துவங்களை புறந்தள்ளிவிட்டு பௌத்த மதத்தை வளர்ப்பதாகவும், பாதுகாப்பதாகவும் கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாட்டில் சில பௌத்த துறவிகளே ஈடுபட்டு வருகின்றனர். ஆனால். இத்தகைய பௌத் தேரரர்களுக்கு எதிராக சட்டம் அதன் கடமையை முறையாகச் செய்யாததனால் இன்றும் அவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

இவ்வாறு செயற்படுகின்றவர்களால் எவ்வாறு பௌத்த மதம் பாதுக்கப்படும். இவர்களால் பௌத்த மதம் வளர்க்கப்படுவதற்குப் பதிலாக அவை சிதைக்கப்படுகிறது என்;றே கூற வேண்டும். பௌத்த மதத்தைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு இனவாத விஷத்தைக் கக்கும் இத்தகைய கடும்போக்காளர்களின் செயற்பாடுகளில் எவ்வித உண்மைத்தன்மையுமில்லை என்பதை பல பௌத்த சிங்கள மக்கள் புரிந்திருக்கிறார்கள். அதுமாத்திரமின்றி, நல்லிணக்கத்தையும், சகவாழ்வையையும், இன ஒற்றுமையையும் விரும்புகின்ற ஏராளமான பௌத்த சிங்கள மக்களுக்கு இத்தகையவர்களின் இனவாத மற்றும் மதவாதச் செயற்பாடுகள் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.  அத்தோடு, இனவாதத்திற்கு எதிராகவும், இன நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பலர் குரல் எழுப்பிக் கொண்டும் அவற்றுக்காக களத்தில் இறங்கியும் செயற்பட்டுக்கொண்டுமிருக்கிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

கருணைக்கு கௌரவம்;

போலிக்குற்றச்சாட்டுக்களையும், தனிநபர் பிரச்சினைகளையும் இன அடக்குமுறைக்கான காரணிகளாக் கொண்டு மிகத்திட்டமிட்ட அடிப்படையில், அரசியல் சக்திகளினது பின்புலத்தினுடனும், கடும்போக்கு மதவாதிகளின் ஆசிர்வாதத்துடனும், சமூக ஊடக வலைப்பின்னல்களின் பங்களிப்புடனும் அம்பாறையிலும், கண்டி மாவட்ட பிரதேசங்கள் உள்ளிட்ட ஏனைய முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இனவாத வன்முறைகளின் போது  முஸ்லிம்களின் வீடுகளும், வர்த்தக நிலையங்களும் பள்ளிவாசல்களும் ஏன் முஸ்லிம்களின் உயிர்;களும் பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள மனிதாபிமானுள்ள பௌத்த தேரர்களினாலும், பொதுமக்களினாலும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. 

இனவாதிகளின் தாக்குதல் அச்சத்தினால், தெல்தெனிய கோமகொட கிராமத்தைச் சேர்;ந்த முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த பலர் கோமகொட விகாரையை நோக்கி ஓடிச்சென்றவேளை அவர்களுக்கு அபயகரம் நீட்டியிருக்கிறார் அவ்விகாரையின் விகாராதிபதி கஹகல தம்மானந்த தேரர். அக்குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கியது மாத்திரமின்றி அபிரதேச பௌத்த சிங்கள மக்களுடன் இணைந்து அப்பிரசேத்திலுள்ள பள்ளிவாசல்களையும், முஸ்லிம்களின் வீடுகளை இத்தேரர் காப்பாற்றியிருக்கிறார்.

அதேபோன்று, இனவெறியர்களின் இனவெறியாட்டம் அரேங்கேற்றப்பட்ட கடந்த 5ஆம் திகதி கண்டி உடுநுவர பிரதசத்திலுள்ள சிறிய முஸ்லிம் கிராமமான மீவலதெனியவைச் சேர்ந்த முஸ்லிம்கள் அச்சத்துடன் உள்ளனர் எனக்கேள்யுற்ற கபுராதெனிய டிகிரி போகஹகொட ஸ்ரீ சங்கராய பிரிவெனா விகாரையின் பிரதம தேரர் மீவதுர வஜிரநாயக்க நாஹிமி தேரர் மீவலதெனிய முஸ்லிம்களை அழைத்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளார்.


அவ்வாறு, கண்டி மாவட்டத்தின் தெஹிகம, முறுத்தலாவ, குருகம ஆகிய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் அச்சத்துடனும்ஈ பயத்துடனும் கடந்த 8ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது முஸ்லிம்களின் வீடுகளுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச பௌத்த தேரர்கள் மற்றும் சிங்கள இளைஞர்களையும் இணைத்துக்கொண்டு அபிரதேச பௌத்த மத்திய நிலையத்தின் ஸ்தாபகர் தேரர் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்.

இப்பிரதேசங்களில் மாத்திரமின்றி வன்முறைகள் நிகழ்ந்த பல பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் சொத்துடைமைகளை தேரரர்களும் பௌத்த மக்களும் காப்பாற்றியிருக்கிறார்கள் என்பது அப்பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் இன,மத, பிரதேச வேறுபாடின்றி சகோதரவாஞ்சையுடன் பௌத்த சிங்கள மக்களுடனும் பௌத்த தேரர்களுடனும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் பறைசாட்டுகின்றன. அதுதவிர, ஆனமடுவ நகரில் அமைந்திருந்த முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான ஹோட்டல் இனவெறியர்களினால் தாக்கியழிக்கப்பட்டபோதிலும், அதனை சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகள், பிரதேச பொலிஸார் மற்றும் சிங்கள, தமிழ் முஸ்லிம் வர்த்தகர்கள், பொதுமக்கள் என அப்பிரதேசத்திலுள்ள அனைவரும் இணைந்து ஒரு நாளைக்குள் அக்ஹோட்டலை புனரமைத்து திறந்து வைத்தமை இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் வழங்கிய சாட்டையடி என்றே கூற வேண்;டும். 

பௌத்த சிங்கள மக்கள் இவ்வாறு செயற்பட்டமை இந்நாட்டில் இன ஒற்றுமையுடன் அனைத்து இனங்களும் வாழ வேண்டும் என்பதைப்; புடம்போட்டிருக்கிறது. இருப்பினும், ஏறக்குறைய ஒரு கோடி ஐம்பது இலட்சம் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் புறக்கணிக்கத்தக்க எண்ணிக்கை கொண்ட இனவாத சிந்தனையுடையோரின் செயற்பாட்;டுக்கு ஒரு சில அரசியல்வாதிகளும், பௌத்த தேரர்களும், சில ஊடகங்களும் ஒத்தாசை வழங்கி அவர்களின் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து வருவதானது நல்லெண்ணம் கொண்டவர்கன் இன நல்லிணக்க முற்சிக்கு தடையாகவுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்

இருப்பினும்;, சிறுபான்மையினர் பக்கம் உள்ள நியாயங்கள் பெரும்பாலான பௌத்த சிங்கள மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை என்பது வலிறுத்திக் கூறப்பட வேண்டிதொன்றாகும். இதற்குக் காரணம் தமிழ்பேசும் சமூகத்திலுள்ள சிங்கள மற்றும் ஆங்கில மொழிப்புலமையுடைய ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும் தங்களது மொழி ஆளுமையை முறையாகப்பயன்படுத்தவில்லை அல்லது அதற்கான பொறிமுறையை இன்னும் கண்டுகொள்ளவில்லையெனக் கருதவேண்டியுள்ளது.

இனவாத சிந்தனையுடன் செயற்படுவோரினதும் அவர்களுக்கு உதவிபுரிவோரினதும் நடவடிக்கைகளை மழுங்கடித்து இந்நாட்டில் நிலையான சமாதானத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இன ஒற்றுமைiயும், நல்லிணக்கத்தையும் விரும்பும், அதற்காகச் செயற்படும் அனைத்து; பௌத்த சிங்கள மக்களை இணைத்துக்கொண்டு  இனவாதிகளின் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டியது சிறுபான்மை சமூகங்களான தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தார்மீகப் பொறுப்பும்; காலத்தின் கடப்பாடாகவுமுள்ளது எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

காலத்தின் தேவையில்; ஐக்கியம்

இனவாதத்துக்கெதிரான இன ஒற்றுமையில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையானது காலத்தின் தேவையாகவுள்ளது. குறிப்பாக 1990களின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே காணப்படும் இன ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான சதித்தித்திட்டங்கள் அங்காங்கே இடம்பெறுவதைக் காண முடிகிறது. அத்தகையவர்களினால் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் இனவாதக் கருத்துக்கள் அவற்றைத் தெட்டத்தெளிவாகப் புலப்படுத்துகிறது. தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனங்களின் இன உறவு சீர்குலைமாயின் இனவாத சிந்தனைகொண்டோரின் செயற்பாடுகளை மிக இலகுவாக முன்நகர்த்துவதற்கும் அவர்களின் இலக்குகளை அடைந்து கொள்வதற்குமான கதவுகள் இலகுவாக திறந்து கொள்ளப்படும் என்பதை இரு சிறுபான்மை இனங்களும் புரிந்;து செயற்படுவது அவசியமாகும்.

ஒன்றுமை என்பது ஓரு பேராயுதம். எந்தவொரு சமூகமோ அல்லது சமூகங்களோ ஒற்றுமையுடன் தங்கள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோதுதான் எதையும் சாதித்திட முடியும். அந்த ஒற்றுமையின் வெளிப்பாடு கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில்; வெளிப்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்த மாற்றம் ஏமாற்றமாகி விட்டதா என்ற கேள்வியும் ஒருபுறமுள்ளது. இலங்கையை பல நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மேற்குல ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு, இந்நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்திட செய்த இந்நாட்டுப்பட்டாளர்கள்; இன, மத, மொழி பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு சுதந்திரத்துக்காகப் போராடியதன் பயனாகவே இந்நாடு சுதந்திரம் பெற்றது. சுதந்திர இலங்கை உருவாகுவதற்கும் ஒற்றுமையே பேராயுதமாக அன்று பயன்படுத்தப்பட்டது.

இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகமான தமிழ் பேசும் சமூகங்கள்; தங்களது உரிமைகளை தாங்கள் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்று அன்று கோரியபோது, அவற்றை வழங்க மறுத்த அன்றைய சிங்கள ஆட்சியாளரின் விரும்பத்தகாத நடவடிக்கைள் ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகரச் செய்த வரலாறு நம்முன் உள்ளது. சிறுபான்மையினமான தமிழ் சமூகத்தின் உரிமைப் போராட்டத்துக்கு முறையான தீர்வு இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில், இந்நாட்டில் வாழும் இன்னுமொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தின் மீதும் இனவாதத்தின் கழுகுப் பார்வை திசை திருப்பப்பட்டு பலகோடி ரூபா  பொருளாதார அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இச்சூழ்நிலையில்தான் சிறுபான்மை சமூகங்களுக்கிடையே ஒற்றுமையின் அவசியம் உணரப்படவேண்டியதொன்றாக நோக்கப்படுகிறது. எதிர்கால சிறுபான்மை சமூகத்தின் இருப்பு ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமாயின் இரு சமூகத்திற்கும் பொதுவான விடயங்களில் இரு சமூக அரசியல் தலைவர்களும், பிரமுகவர்களும், சிவில் அமைப்புக்களும் வேஷம் போடுவதை நிறுத்தி, வஞ்சம் தீர்ப்பதை மறந்து ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின்  நலனை நிறைவேற்றுவதற்கும்;, இனவாதத்திற்கு எதிராகச் செயற்படுவதற்குமான மனப்பாங்கை ஏற்படுத்தி ஒற்றுமைப்படுவது அவசியமாகவுள்ளது.

தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு நன்மை கிடைக்கும் விடயத்தில் குறைக்கண்டு அவற்றை விமர்சனம் செய்து, வெற்றுக்கோஷங்கள் கொண்ட ஊடக அறிக்கைகளை விட்டு இரு இனங்களுக்கிடையிலும் சந்தேகங்களை உருவாக்கி சுயநல அரசியல் வியாபாரம் செய்யும் இரு இனத்தினதும் அரசியல்வாதிகளின் பின்னால் மக்கள் செல்வதைத் தவிர்ப்பதும் அவசியமாகவுள்ளது. இந்த அவசியத்திற்கான மாற்றம் இரு சமூகங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு ஆட்சி மாற்றத்திற்காக வாக்குகளைப் பயன்படுத்திய தமிழ் பேசும் சமூகங்கள், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்நகர்த்தப்படும் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவையை அவசரமாக உணர வேண்டியுள்ளது. அத்தோடு, தங்களுக்குள்ள பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள விட்டுக்கொடுப்புடனும்;, புரிந்துணர்வுடனும் செயற்படுவதற்கும்; முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதும் சமகாலத் தேவையாகக் கருதப்படுதல் வேண்டும்.

ஒரு தேசிய இனத்தின் இனத்துவ அடையாளங்களை அழிப்பதற்கு, அல்லது அந்த இனம் தமது தனித்துவ அடையாளங்களை வெளிக்காட்டக் கூடாது என அச்சுறுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லாத போது,  கடும்போக்காளர்கள் ஒரு தேசிய இனத்தின் இனத்துவத்துக்கெதிராக தொடர்ச்சியான நெருக்குவாரங்களையும், அடாவடித்தனங்களையும் புரிந்துகொண்டு வருவதை சட்டம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. சட்டத்தை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தப்படுவது பல அழிவுகளைச் சந்திக்க வைக்கும். சட்டத்தின் காலதமதமான நடவடிக்கைதான் அம்பாறையிலும், திகனையிலும் முஸ்லிம்களை அழிவுக்கு இட்டுச்சென்றிருப்பதாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கூறிவருகிறார்கள்.

சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இந்நாட்டில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் சர்வதேசத்தின் பார்வை ஈர்த்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37வது அமர்வில் ஒலிக்கும் ஆதரவுக் குரல்கள் இவற்றைப் பறைசாட்டுகின்றன. இந்த நிலையை உருவாகுவதற்கு குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக சட்டம் அதன் கடமையை உரிய நேரத்தில் செய்யத் தவறிமையே காரணம் என்று கூறுவதில் தவறிருக்காது.

இந்நாட்டில் இனவுறவுடன் நிம்மதியாக அனைத்து இனங்களும்; வாழ வேண்டுமாயின் இனவாதத்திற்கு எதிரான இன ஒற்றுமை அவசியமாகவுள்ளது.  அத்தோடு இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், குறித்த நபர்களுக்கு எதிராக சட்டம் அதன் கடமையை முறையாகச்; செய்வதற்கும்  இன ஒற்றுமையினூடாக உரிய தரப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட  வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். அதுமாத்திரமின்றி இனவாதத்திற்கு எதிராகச் செயற்படுகின்ற பௌத்த சிங்கள மக்களுடன்; கைகோர்த்து தமிழ் பேசும் சிறுபான்மையினரும் செயற்படும்போதுதான் சமூகங்களின் நல்லிணக்கத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலை முடியடித்து இந்நாட்டின் எதிர்கால சந்ததியினர் ஒரு வரையொருவர் புரிந்து வாழும் நிலை உருவாக்கப்படும். இல்லைNயில் இந்நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியதான்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment