இலங்கைக்குள் சீன-இந்திய 'முறுகல்': கோத்தா! - sonakar.com

Post Top Ad

Friday 30 March 2018

இலங்கைக்குள் சீன-இந்திய 'முறுகல்': கோத்தா!


நாட்டின் சொத்துக்களை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வழங்கி நாட்டுக்குள் சீன-இந்திய முறுகலை அரசாங்கம் வலிந்து அழைத்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்தியாவுக்கும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கும் வழங்கி இவ்வாறு இரு நாடுகளுக்கிடையிலான போட்டியை இலங்கை மண்ணில் அரசாங்கம் உருவாக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மஹிந்த அரசு உருவாக்கி வைத்த கடன்சுமைகளைக் குறைக்க வெளிநாடுகளுடனான கூட்டுறவு வர்த்தக ஒப்பந்தங்களை செய்வதாகவும் அதன் மூலம் கடன் சுமையை அடைத்து வருவதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment