லிட்ரோ சிலிண்டர்களை திரும்பப் பெற உத்தரவு - sonakar.com

Post Top Ad

Wednesday 8 December 2021

லிட்ரோ சிலிண்டர்களை திரும்பப் பெற உத்தரவு

 


டிசம்பர் 4ம் திகதிக்கு முன்பாக விநியோகிக்கப்பட்ட யன்படுத்தப்படாத அனைத்து உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளது நுகர்வோர் அதிகார சபை.


பழைய பொலித்தீன் சீல் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய பொலித்தீன் சீலுடன் கூடிய சிலிண்டர்களை விநியோகிக்குமாறு அவ்வுத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏலவே லிட்ரோ நிறுவனம் புதிய தொகுதி சிலிண்டர்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment