இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை கட்டாயம் தகனம் செய்வதாக இருந்து வந்த நடைமுறை அரசாங்கம் நேற்று முன் தினம் நீக்கியுள்ளது.
எனினும், உடலங்களை எங்கே அடக்கம் செய்ய அனுமதிப்பது? என்பது தொடர்பில் இன்னும் தெளிவான விளக்கமோ முடிவோ அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இது தொடர்பில் சுகாதார அமைச்சில் இன்று விசேட ஆலோசனையை நடாத்தி துரிதமாக அதற்கான வழிகாட்டலை வெளியிடும் நிமித்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சில இடங்களில் தொடர்ந்தும் எரியூட்டுவதற்கான நிர்ப்பந்தம் தரப்படுவதாக பொது மக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment