ஆங் சூ கீ இராணுவத்தினரால் தடுத்து வைப்பு - sonakar.com

Post Top Ad

Sunday 31 January 2021

ஆங் சூ கீ இராணுவத்தினரால் தடுத்து வைப்பு

 


மியன்மாரின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சூ கீ அந்நாட்டின் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


மியன்மாரில் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஆங் சூ கீ இராணுவத்திற்கு எதையும் செய்ய முடியாதவராகவும் ரோஹிங்ய மக்களுக்கு எதிராக நடந்தேறிய கடுமையான இன சுத்திகரிப்பினை தடுக்க முடியாதவராகவும் சர்வதேச அரங்கில் தலை குனிவை சந்தித்திருந்தார்.


இந்நிலையில், உள்நாட்டின் இராணுவத்தினருடன் ஏற்பட்ட முறுகல் அதிகரித்து தற்போது அவர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment