'குடி' மக்கள் இடையே சண்டை; 19 பேர் வைத்தியசாலையில் - sonakar.com

Post Top Ad

Thursday 14 May 2020

'குடி' மக்கள் இடையே சண்டை; 19 பேர் வைத்தியசாலையில்


நேற்றைய தினம் மீண்டும் மதுபான சாலைகளை அரசாங்கம் திறந்து விட்டுள்ள நிலையில் போதையில் இடம்பெற்ற சண்டை சச்சரவுகளின் பின்னணியில் 19 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஹற்றன் மற்றும் மஸ்கெலிய பகுதிகளிலேயே குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்..

இதேவேளை, நேற்றைய தினம் பெரும்பாலான மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் பாவனையாளர்கள் காத்திருந்த அதேவேளை பல இடங்களில் சமூக இடைவெளியைப் பேண வைக்க பொலிசார் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

No comments:

Post a Comment