![](https://i.imgur.com/wJzgu0M.png?1)
நாட்டின் ஜனாதிபதியாவதற்கான ஆகக்குறைந்த வயதை 35 ஆக உயர்த்தியுள்ளதனால் நாமல் ராஜபக்சவுக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
இந்தியா சென்றுள்ள நிலையில் அங்கு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், இருந்த போதிலும் தனது சகோதரர் நிச்சயமாக ஒரு போட்டியாளர் என தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியிலிருந்து ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என வினவப்பட்டதற்கே மஹிந்த இவ்வாறு பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment