சஷியின் போலி கடவுச்சீட்டு; மே மாதம் தீர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 11 March 2022

சஷியின் போலி கடவுச்சீட்டு; மே மாதம் தீர்ப்பு!

 



மஹிந்த ராஜபக்சவின் உத்தம தோழராக இருந்து தற்போது அரசின் விரோதியாக மாறியிருக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கொன்றின் தீர்ப்பு மே மாதம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, ராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றதன் பின்னணியிலேயே இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தமையும் விமல் வீரவன்சவும் இவ்வாறே போலி கடவுச்சீட்டொன்றை வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment