நிதியமைச்சருக்கு 'பொருளாதாரம்' தெரிய வேண்டும்: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Tuesday 28 December 2021

நிதியமைச்சருக்கு 'பொருளாதாரம்' தெரிய வேண்டும்: தயாசிறி

 



மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பொருளாதாரம் பற்றிய அறிவு இல்லாதவர்கள் நிதியமைச்சர்களாக இருந்து வந்ததே நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்கு காரணம் என்கிறார் ஸ்ரீலசுக செயலாளர் தயாசிறி ஜயசேகர.


பொருளாதாரம் பற்றிய தெளிவில்லாதவர்கள் அப்பதவியை பெற்றுக் கொள்வதனால் எவ்வித முறையான திட்டங்களும் செயற்படுத்தப்படுவதில்லையெனவும் திட்டமிடல் இல்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை நிதியமைச்சர்களாக அனுமதித்ததிலிருந்து இந்தத் தவறு தொடர்வதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment