10 மாத குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று - sonakar.com

Post Top Ad

Friday 9 October 2020

10 மாத குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று


 

கொழும்பு, லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த, மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 10 மாத குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் குறித்த குழந்தையை ஏனைய சிகிச்சை பெறும் குழந்தைகளிலிருந்து வேறு படுத்தி சிகிச்சையளித்த வைத்தியர்கள், மேலதிக சிகிச்சைக்காக ஐ.டி.எச்சில் அனுமதித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுக்குள்ளாகி  ஒரு வாரம் சென்ற பின்னரே குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment