இலங்கையில் நடைமுறையில் இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பினை மீளாய்வு செய்யக் கோரி அங்கு இயங்கும் வட அமெரிக்க பிராந்தியத்துக்கான இலங்கை முஸ்லிம்களின் அமைப்பு (TASMINA) இன்று கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளது.
ஐ.நாவுக்கான பிரதி இலங்கைத் தூதரிடம் அவ்வமைப்பின் தலைவர் அர்சாத் உதுமாலெப்பை இக்கடிதத்தினை நேரடியாகச் சென்று கையளித்திருந்தார்.
சோனகர்.கொம்முக்கு கிடைத்த கடிதப் பிரதியில், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உளக்குமுறல்கள் விபரிக்கப்பட்டிருப்பதோடு கட்டாய ஜனாஸா எரிப்பினை மீளாய்வுக்குட்படுத்தி குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment