7.5 கோடி ரூபா கொகைனுடன் பொலிவிய பிரஜை கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday 5 March 2019

7.5 கோடி ரூபா கொகைனுடன் பொலிவிய பிரஜை கைது!


7.5 கோடி ரூபா கொகைனுடன் இலங்கை வந்தடைந்த பொலிவிய நாட்டு பிரஜையொருவரை விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்தியா, பாகிஸ்தான், பங்களதேஷ், நைஜீரியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாட்டவர்கள் இலங்கைக்குள் போதைப் பொருளுடன் அகப்பட்டு வரும் நிலையில் இன்றைய கைதில் பொலிவிய நாட்டு பிரஜை ஈடுபட்டுள்ளதுடன் குறித்த நபரிடமிருந்து ஐந்து கிலோ கிராம் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


2009 யுத்த நிறைவின் பின் இலங்கை சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மையமாக உருவெடுத்துள்ளதாக அண்மையில் ஹர்ஷ டிசில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment