157 பேருடன் பயணித்த எத்தியோப்பியன் விமானம் வீழ்ந்து விபத்து - sonakar.com

Post Top Ad

Sunday 10 March 2019

157 பேருடன் பயணித்த எத்தியோப்பியன் விமானம் வீழ்ந்து விபத்து


149 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்களுடன் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ்அபாபாவிலிருந்து கென்யா, நைரோபி நோக்கிப் பயணித்த எத்தியோப்பியன் எயார்லைன்சுக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்தின் இழப்புகள் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லையாயினம் எத்தியோப்பிய பிரதமர் விபத்தை உறுதி செய்து தகவல் வெளியிட்டுள்ளார்.



பொய்ங் 737 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment