மாகாண சபைத் தேர்தலே முதலில் வரும்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Saturday 9 February 2019

மாகாண சபைத் தேர்தலே முதலில் வரும்: மைத்ரி


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தலே இடம்பெறும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான பழைய முறைமை நீக்கப்பட்டுள்ளதால் புதிய முறைமையில் நடாத்த, எல்லை நிர்ணய விவகாரம் முடிவுக்கு வரவில்லையெனவும் மீண்டும் பழைய முறைமையை அமுல் படுத்துவதாயின் அதற்கு நாடாளுமன்றில் ஆவன செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்ற பொலன்நறுவயில் நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி முதலில் மாகாண சபைத் தேர்தலே இடம்பெறும் எனவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment