நானாகத் தான் விலகினேன்: A.S.P லியனகே! - sonakar.com

Post Top Ad

Tuesday 5 February 2019

நானாகத் தான் விலகினேன்: A.S.P லியனகே!


கட்டாருக்கான இலங்கைத் தூதர் மீள அழைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தானகவே பதவி விலகியதாக தெரிவிக்கிறார் முன்னாள் கட்டாருக்கான இலங்கைத் தூதர் ஏ.எஸ்.பி. லியனகே.



லியனகேயினால் பதிவு செய்யப்பட்டிருந்த அரசியல் கட்சிச் சின்னத்திலேயே மைத்ரிபால சிறிசேன பொது வேட்பாளராகப் போட்டியிருந்தார். இந்நிலையில் அவரை கட்டாருக்கான தூதராக நியமித்திருந்த அதேவேளை அங்கு இயங்கும் இலங்கைப் பாடசாலை நிர்வாகத்துடன் லியனகே முறுகலில் ஈடுபட்டிருந்ததுடன் அதனை அபகரிக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இப்பின்னணியில் தற்போது அவர் மீள அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தானாகவே விலகியதாக லியனகே தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment