ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஏற்க மாட்டேன்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Wednesday 9 January 2019

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஏற்க மாட்டேன்: மஹிந்த


பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை நடாத்தி மஹிந்த ராஜபக்சவை பல்வேறு நிதி மோசடிகளில் பொறுப்பு சாட்டிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையைத் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.



அதே ஆணைக்குழுவே மத்திய வங்கி ஊழலை விசாரித்திருந்த அதேவேளை அதனை அடிப்படையாக வைத்து மஹிந்த அணி தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சி மீது குற்றஞ்சாட்டி வருகிறது.

எனினும், சுயாதீன தொலைக்காட்சி நிதி மோசடிக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பாளியென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விளம்பர கட்டணங்கள் இதுவரை செலுத்தப்படாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment